'முகநூல் காதலியை சந்திக்க வந்து காட்டுக்குள் பதுங்கியவர் கைது'

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

முகநூல் மூலம் காதலித்து, காதலியை பார்க்க வந்த நபரொருவர் திருட்டு சம்பவம் ஒன்றில் சிக்கி பொலிஸ் சிறைக்கூண்டில் தவிக்கும் சம்பவமொன்று பலாங்கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.





18 வயதான இந்த இளைஞர் குருணாகல் நகருக்கு அண்மையிலுள்ள கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். முகநூல் மூலமாக பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரது அழைப்பின் பேரில் இந்த இளைஞர் கடந்த வாரம் பலாங்கொட பிரதேசத்துக்கு வந்துள்ளார்.





முதல் நாள் காதலியின் நண்பரொருவரது வீட்டில் தங்கியிருந்து மறுநாள் காதலியை சந்தித்து காதல் கதைபேசி திரும்பி வந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள கடை ஒன்றுக்குள் நுழைந்து காசாளரின் இருக்கையில் யாரும் இல்லாததால் பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.அப்போது திடீரென உரிமையாளர் வரவே அங்கிருந்து தப்பி அருகிலிருந்த காட்டுக்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளார்.





காதலிக்கு பரிசுப் பொருட்களை வாங்கி அன்பளிப்பு செய்ததாலும் முதல் நாள் இரவு காதலியின் நண்பருடன் விருந்துண்டதாலும் அவரிடம் இருந்த பணம் எல்லாம் செலவழிந்துவிட்டது. வீடு திரும்புவதற்காக பணம் இல்லாததால் கடை காசாளர் லாச்சியில் கை வைக்க எண்ணி உள்ளார்.





காட்டில் பதுங்கியிருந்த இளைஞனை கிராமவாசிகள் பிடித்து பலாங்கொட பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.





இரவு விருந்துண்டு மகிழ்ந்த காதலியின் நண்பனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.