ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் அன்டியன் கருவிகள் திருட்டு
Australia 2 ஆண்டுகள் முன்
மெல்பேர்ண் பரிசோதனை நிலையத்திலிருந்து 1400 அன்டிஜன் சோதனைக் கருவிகளைத் திருட முயன்ற கோவிட்-19 சோதனைப் பணியாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் மெல்பேர்ண் நகரத்தை அண்மித்த கொவிட்-19 பரிசோதனை நிலையத்திலிருந்தே சுமார் 1400 கருவிகளைத் திருட முயன்றனர் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் 19, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிட்னியில் பெரும் எண்ணிக்கையிலான அன்டியன் பரிசோதனைக்கருவிகள் திருடப்பட்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related Posts