கச்சத்தீவு திருவிழா - இந்திய யாத்திரிகளுக்கு இம்முறை அனுமதி இல்லை
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனயாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
உள்ளூர் யாத்திரிகர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்த உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Related Posts