இன்றும் 12 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் மீனவர்கள் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.





07 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் 12 மீனவர்களும் இன்று(28) விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்தார்.





விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சிறைச்சாலைகள் அத்தியட்சகரூடாக மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





அங்கிருந்து மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.