சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
Sri Lanka 1 வருடம் முன்
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு , புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று (19) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புதன்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் 21 பேரை கைது செய்ததுடன் இரு படகுகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன் பிரதான சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related Posts