ரயிலுடன் மோதியது வான் - நால்வர் படுகாயம்
புத்தளம் ரயில் மார்க்கத்தில் பெரியமுல்லை ரயில் நிலையத்திற்கு அருகில் வானொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரயில் கடவை மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அதனை கடந்து செல்ல முற்பட்ட குறித்த வான், ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.
வானில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Related Posts