மனைவியின் மரண செய்தி கேட்டு, கணவர் தற்கொலை!

Sri Lanka 1 வருடம் முன்

banner

தனது மனைவி இறந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியுற்ற கணவர், லொறிக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.  





பங்கதெனிய, தெமட்டபிட்டியைச் சேர்ந்த ரங்க சுமேத என்ற 37 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  





உயிரிழந்தவரின் மனைவியான, சுமேத கயானி ஹேமமாலி, இரு பிள்ளைகளின் தாய். கடந்த 8ஆம் திகதி தமது வீட்டுக்குப் பின்னாலுள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 





இந்த தகவல் கேள்வியுற்ற பின்னரே, லொறியில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு பாடசாலை செல்லும் வழியல் இரு பிள்ளைகள் உள்ளனர்.