' ஒரு லீற்றர் சிறுநீர் ரூ. 1000' - நடந்தது என்ன?

Sri Lanka 1 வருடம் முன்

banner

நீர் கொழும்பு, தெல்வத்த சந்திக்கு அருகே மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நபரொருவருக்கு, ஒரு லீற்றர் சிறுநீர் விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.





பெற்றோல் இல்லாமல் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நபரிடம், பெற்றோல் வேண்டுமா என ஒருவர் கேட்டுள்ளார்.





மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் அதற்கு இணங்கி, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு லீற்றர் பெற்றோலை வாங்கி மோட்டார் சைக்கிளில் நிரப்பியுள்ளார்.





பின்னர் அவர் பெற்றோலை விற்பனை செய்த நபரிடம், 5, 000 ரூபாய் வழங்கி, ஆயிரம் ரூபா எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.





அந்த நபர் அருகில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு நிலையத்துக்கு பணத்தை மாற்ற சென்றுள்ளார்.





மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், மோட்டார் சைக்கிளை 'ஸ்டார்ட்' செய்து கொண்டு அங்கு செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் இடைநடுவில் நின்றுவிட்டது.





அது குறித்து ஆராய்ந்தபோது, பெற்றோலுடன் சிறுநீர் கலந்து விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது. பெற்றோர் நிறம்மாறாதிருக்க சிறுநீரை கலந்துள்ளார் என தெரியவந்தது.