எரிபொருள் வரிசை மோசடிகளும் தொடர்கின்றன

Sri Lanka 1 வருடம் முன்

banner

பெற்றோல் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த நபரை, எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல மாஜிஸ்திரேட் நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.





கொரியாவில் வருடக்கணக்காக தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய நபரொருவர், கடந்த 24ஆம் திஙதி மாவனெல்ல நகரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார்.





அங்கு நின்ற நபரொ ருவர் தம்மிடம் 10 லீற்றர் பெற்றோல் இருப்பதாகவும் விரும்பினால் பத்தாயிரம் ரூபாவுக்கு அதை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





வரிசையில் நிற்பதை விட அதிகவிளனலைக்கேனும் எரிபொருளை கொள்வனவு செய்ய தீர்மானித்த கொரியாவிலிருந்து திரும்பி நபர் ,சந்தேக நபரின் வழிகாட்டலுடன் மாவ னெல்ல, நாதெனிய பிரதேசத்துக்கு பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றுடன் சென்றுள்ளார்.





அங்கு சந்தேகநபர் கொரிய நபரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவையும் பிளாஸ்டிக் கொள்கலனையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.





சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் அந்த நபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அறிந்து கொண்டு மாவனெல்ல பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.





எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இனம் கண்ட அந்த நபரை கைது செய்தனர்.