எரிபொருள் வாங்க சென்ற 52 வயது பெண் கள்ள காதலனுடன் ஓட்டம்!

banner

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற 52 வயது பெண்ணொருவர், எரிபொருள் பெறுவதை கைவிட்டு, காதலுடன் ஓடிய சம்பவம் ஒன்று பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.





பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான குறித்த பெண் , மூன்று பிள்ளைகளையும் கணவனையும் கைவிட்டு - திருமணமான நபர் ஒருவருடன் சென்றுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.





இவ்வாறு கள்ளக்காதலுடன் சென்ற பெண் வீட்டில் இருந்து 2 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை எடுத்துச் சென்றுள்ளார் என்றும் அவருடன் சென்ற கள்ளக் காதலன் அவர் பொறுப்பில் இருந்த பசுக்கள் அனைத்தையும் 22 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





மூன்று பிள்ளைகளின் தாய் தனது வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் புதிய வாழ்க்கை ஆரம்பிக்க சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.





இருவரது குடும்பத்தினரும் பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.





பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.