பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாயின் கடிதம் சிக்கியது

banner

தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிகா வாவியில் நேற்றுக் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்குக் குறித்த கடிதம் கிடைத்தது.





குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவும், மருந்தை உட்கொள்வதற்கு உடலுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.





32 வயதான தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா வாவியில் நேற்று குதித்திருந்தார்.





சம்பவத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் உயிர் பிழைத்தார்.





உயிரிழந்த பெண்ணிடம் இருந்து 2 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.





சுரங்கிகா மதுமாலி என்ற 32 வயதுடைய தாய் நேற்றுப் பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்துள்ள நிலையில் 11 வயதுடைய சாம் துஷ்மந்த நீந்திக் என்ற மகன் கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டார்.





அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தாயைக் காப்பாற்ற முயற்சித்தனர்.





தாய் மற்றும் 5 வயதுடைய மகள் நெதும் நெத்மால் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் 5 வயது மகள் மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்திருந்தார்.





எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்று மாலை உயிரிழந்திருந்தார்.