சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முற்பட்ட 51 பேர் கைது!

banner

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 51 பேர் இன்று அதிகாலை கிழக்கு பிராந்தியக் கடற்பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.





ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக சென்றுகொண்டிருக்கும்போது, கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.





சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச் செல்லும் 6 பேர் உள்ளிட்ட 41 ஆண்களும், 05 பெண்களும் 05 குழந்தைகளும் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.









யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 05 வயது முதல் 56 வயது வரையானோர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.





கிழக்கின் திருகோணமலை கடற்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





இதற்கு முன்னர் நேற்று முன்தினம் (ஜூலை 2ஆம் திகதி) சட்டவிரோதமாக பயணிக்க முயற்சித்த 24 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 08 ஆண்கள், 06 பெண்கள், 10 குழந்தைகள் உள்ளிட்ட இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.