'துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியாலேயே சாவு'

banner

கொழும்பு,பெஸ்டியன் மாவத்தையில் மே மாதம் 30ஆம் திகதி, இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார்.





பெம்முல்லயில் இன்று(04) அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போதே, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





உயிரிழந்த 41 வயதுடைய நபர், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.





கைது செய்ய முற்பட்ட போது, ​​சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





பின்னர், மோட்டார் சைக்கிளை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.





இதன்போது, சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, T-56 துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்துள்ளார்.





இதனையடுத்து, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.