தங்க சங்கிலிக்காக இளம் தாய் கழுத்தறுத்து படுகொலை! தென்னிலங்கையில் பயங்கரம்!!

Sri Lanka 1 வருடம் முன்

banner

கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வீடு நோக்கிசென்று கொண்டிருந்த தாயின் கழுத்தை கூரான ஆயுதத்தால் அறுத்து கொலை செய்து - கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற கொடூரச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.





இருதெனியாய,தொலம்புஎல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.





கொலையுண்ட பெண்ணின் கணவர், ‘ வயம்பஎல’ திட்டத்தில் பணி புரிகின்றார்.





இன்று (4)காலை இப் பெண் பொல்பித்திகம நகருக்கு சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இந்த துர்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.





தாய் கொலை செய்யப்பட்டபோது, அவரது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.





கொலையாளியை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.