எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு - தொடர்கிறது அவலம்!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பொரளை  டிக்கல் வீதியிலுள்ள ஐஓசி  எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் பெறுவதற்காக  வரிசையில் காத்திருந்த நபரொருவர்  வாகனத்துக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். 





அங்கொட,கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த சுஜிவ விகும் குணரத்ன (60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.





உயிரிழந்த நபர் கடந்த 4 ஆம் திகதி இரவு,  எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகனத்தில் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது என பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.