ஆஸ்திரேலியாவின் இராணுவச் செலவு அதிகரிப்பு
Australia 1 வருடம் முன்
ஜப்பான், அவுஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தத்தமது இராணுவத்திற்கான வரவு செலவுத்திட்டங்களையும் செலவீனங்களையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
தென் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நாடுகள் மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் சொலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் சிங்கப்பூர் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
புவியரசியல் பதற்றங்கள் காரணமாக சீனாவுடனான ஜப்பானின் உறவுகளும் மோசமடைந்து வருகின்றன. ஜப்பானின் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் வசிக்காத செங்காகு தீவுகளுக்கு சீனா உரிமை கோருவதற்கு ஜப்பானிய மக்கள் ஏற்கனவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தாய்வான் நீரிணையில் கையாளும் தந்திரோபாயத்தை செங்காகு தீவுகள் கடற்பகுதியிலும் கப்பல்களை அனுப்பி சீனா கையாளுவதாக வொஷிங்டனை தளமாகக் கொண்டுள்ள உலகளாவிய அமைப்பொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் தாய்வானுக்கு அருகிலுள்ள யோனகுனி தீவுகளில் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜப்பான் அதிகரித்துள்ளது.
Related Posts