'கோட்டாவின் முடிவை மாற்றினார் ரணில்'

Sri Lanka 1 வருடம் முன்

banner

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் காலி முகத்திடல் வளாகத்தில் போராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், போராட்டம் நடத்த இடமளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.





இதன்படி நாளை முதல் அந்த இடத்தில் போராட்டம் நடத்துவதையோ, அனுமதியின்றி தங்குவதையோ தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.





எனினும் ,விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கம், புதிய நகர மண்டபம் மற்றும் ஹைட் பார்க் மைதானம் ஆகிய இடங்களை பொது மக்களுக்கு ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கு அரசு இலவசமாக வழங்கவுள்ளது.





அனுமதியின்றி இந்தப் போராட்டத் தளங்களில் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.