'கொமன்வேல்த்' போட்டிக்கு சென்ற இலங்கை வீரர்கள் இருவர் மாயம்!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பிரிட்டன், , பேர்மின்ஹாமில் நடைபெறும் 22 ஆவது பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கை அணியின் விளையாட்டு வீராங்கனை ஒருவரையும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரையும் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது.





இலங்கை ஜூடோ வீராங்கனை முதலாவது போட்டியில் கலந்துகொண்டு தோல்வியுற்றவுடன் இவ்வாறு காணாமற் போயுள்ளார். பின்னர் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.





இவர்கள் காணாமற்போனது தொடர்பாக இலங்கை அணியின் முகாமைத்துவம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் பேர்மின்ஹாம் மெட்ரோ பொலிட்டன் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





இதையடுத்து ஏனைய வீரர்,வீராங்கனைகளின் கடவுச்சீட்டுக்களை இலங்கை குழுவின் பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ சேகரித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





இந்த விளையாட்டு விழாவுக்கு 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் 51 அதிகாரிகளும் இலங்கை குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.