முன்னாள் அமைச்சரின் வீட்டில் தங்கம், பணம் கொள்ளை!

Sri Lanka 1 வருடம் முன்

banner

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற நூர்தீன் மசூருக்கு சொந்தமான புத்தளம் நாகவில்லு பிரதேசத்திலுள்ள சொகுசு வீட்டுக்குள் புகுந்து 160 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.





நூர்தீன் மசூர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் இதய நோய் காரணமாக 10 வருடங்களுக்கு முன்னர் காலமானார்.





முன்னாள் அமைச்சர் ஒரு பிரபல வர்த்தகராவர். இவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வர்த்தக நிலையங்கள் இருக்கின்றன.





காலஞ்சென்ற அமைச்சரது மனைவி ஒரு சில நாட்கள் வீட்டில் இல்லாத நிலையில், இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.