விகாரையில் பணம் திருடி நண்பர்களுக்கு விருந்து வைத்த முன்னாள் சிப்பாய் கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பானந்துர பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் அல்மாரியிலிருந்து பெரும் தொகை பணத்தை திருடிய, முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், பின்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





பின்வத்த, நாரங்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.





இந்த நபர் திருடிய பணத்தில் தமக்குத் தேவையான ஆடம்பர உடைகளை கொள்வனவு செய்துள்ளார். பின்னர் தமது நண்பர்கள் நால்வருடன் நுவரெலியா சென்று உல்லாச பயணிகள் ஹோட்டலின் தங்கியிருந்து ஆடம்பரமாக பொழுதை போக்கியுள்ளதுடன் திருடிய ஆறு லட்சம் ரூபா பணத்தையும் செலவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.