கண்டி பெரஹரவுக்கு வந்த யானை பாகன் கஞ்சாவுடன் கைது!
கண்டி, பெரஹரவுக்கு மஹரகம பிரதேசத்திலிருந்து யானைப் பாகன் ஒருவர், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், கண்டிதலதா மாளிகை வளவுக்குள் நின்றபோது கைது செய்யப்பட்டதாக தலதா மாளிகை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர், புத்தள பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தலதா மாளிகை பொலிஸார் மேலும் கூறினர்.
Related Posts