சஜித் அணியின் முடிவுக்கு ஐ.தே.க. சாட்டையடி

banner

” அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரவேண்டிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனி ஒருவரை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அரசாங்கமே பலமடையும். எனவே, தனி ஒருவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டமை வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்.”





இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.





வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





அதேவேளை, பிளவடைந்துள்ள அரசாங்கத்தை மீள ஒன்றிணைக்கும் முயற்சியையே பிரேரணை ஊடாக ஐக்கிய மக்கள் செய்துள்ளது என ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.