மீண்டும் களமிறங்குவேன் - கோட்டா உறுதி

banner

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தான் உத்தேசித்துள்ளார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்தார்.





ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.





2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ச போட்டியிடுவார் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வந்தநிலையிலேயே, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.





இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் ஒருவர் இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.