நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 155 வாக்குகள்?
Politics 2 ஆண்டுகள் முன்
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 155 வாக்குகள் விழக்கூடும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின்போதும் தான் வெளியிட்ட தகவல் இறுதியில் நிரூபனமானது. எனவே, தற்போது கூறும் கருத்தும் உண்மை என்பது நாளை மாலை தெரியவரும்.
எதிரணியிலுள்ள முக்கிய பிரமுகர் ஒருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
Related Posts