இராஜாங்க அமைச்சரை வித்தியாசமாக கண்டிக்கும் அங்கஜன்
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டதாக கூறப்படும் செயல் உண்மையெனில் அது கண்டிக்கப்படவேண்டியதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுடன் கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை கவலைப்படுத்துகின்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை அருகிலுள்ள குளத்தின் வர்ணங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுடன் அதில் மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
Related Posts