பந்துலவின் யோசனைக்கு முற்றுபுள்ளி வைத்த டலஸ்

banner

நாட்டில் ஒரு லட்சத்துக்கு மேல் மாத வருமானம் பெறுபவர்களிடமிருந்து 5 வீத வரியை அறிவிடுவதற்கு எவ்வித தீர்மானத்தையும் அரசு எடுக்கவில்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.





மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடமிருந்து 5 வீத வரி அறிவிடப்பட வேண்டும் என பந்துல குணவர்தனவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் அரசு தீர்மானம் எடுத்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





“ மேற்படி யோசனையானது அமைச்சர் பந்துல குணவர்தனவின் தனிப்பட்ட கருத்தாகும். அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. அவ்வாறு வரி அறவிட தீர்மானிக்கவும் இல்லை. அதேபோல மக்களால் செலுத்தப்படும் வரிசை வீண்விரயமாக்கும் விதத்தில் அரசு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.” - என்றும் அமைச்சர் கூறினார்.