'மாவீரர் செல்வங்களுக்கு சபையில் அஞ்சலி'

banner

" தமிழ் இனத்துக்காக போராடிய மாவீரர் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றேன்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமது உரையின் இறுதிப்பகுதியிலேயே இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.





" இன விடுதலைக்காக வாழ்வியலின் அத்தனை சுகங்களையும் துறந்து தம்மையே தற்கொடையாக்கிய, தமிழ் இனத்தின் எழுச்சிக்காக மூச்சாகி நின்ற அத்தனை மாவீரர் செல்வங்களை அஞ்சலித்து என்னுரையை நிறைவு செய்கின்றேன்." - என்றார்.