'குழு அமைப்பதால் பயன் இல்லை - நேரில் களமிறங்குங்கள்'
Politics 2 ஆண்டுகள் முன்
நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மீதான தாக்குதல் முயற்சி சம்பவங்கள் குறித்து ஆராய குழு ஒன்றினை நியமிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கூட இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்தப்பட்டதாகவும் எவ்வாறாயினும், அவர்கள் வழங்கிய அறிக்கையின் ஊடாக எதுவுமே வெளிவரவில்லை.
அத்தோடு குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு என்றாலும் நாடாளுமன்ற நடவடிக்கையில் இருந்து அவர்களை இடைநிறுத்தக் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எனவே, கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய சபாநாயகர் நேரில் தலையிட வேண்டும். - என்றார் அநுர.
Related Posts