நாய் சண்டையால் மறியலுக்கு சென்ற இருவர்!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

வீட்டில் வளர்க்கும் நாய்களால் ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.





ரக்வான பன்சல்கொட பிரதேசத்தில் குடும்பங்களுக்கிடையே கடந்த 9 ஆம் திகதி இரவு பிரச்சனையொன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.





வீதிக்கருகிலுள்ள வீடு ஒன்றில் தான் உட்பட கிராமவாசிகள் வீதி வழியாக செல்லும்போது அச்சுறுத்தும் வகையில் இந்த நாய்கள் குறைப்பதாகவும் இதனால் இந்த வீதியில் பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளதாக கூறி நாய்கள் வளர்க்கும் வீட்டாருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.





இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நாய் வளர்க்கும் வீட்டில் உள்ள இளைஞனும் அயலிலுள்ள இளைஞனும் மோதிக் கொண்டு உள்ளனர்.





இந்த மோதலில் அயல்வீட்டு இளைஞனின் கழுத்தில் கூரான ஆயுதத்தால் குத்தி படுகாயமடைந்துள்ளதாகவும் இந்த மோதலில் தொடர்புபட்ட நாய்கள் வளர்க்கும் வீட்டிலுள்ள இளைஞரும் காயமுற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





காயமுற்ற காரணத்தால் இரு இளைஞர்களும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக பாடசாலை மாணவர் ஒருவரும் முச்சக்கர வண்டி சாரதியொருவரும் வரும் ரக்வான பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.





ரக்வான பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.