'எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்' - உலக நாடுகளிடம் தலிபான்கள் கோரிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





உலக நாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் தங்களை அங்கீகரிக்க வேண்டுமென ஆப்கான் பதில் பிரதமரும் தலிபான் தலைவருமான முகம்மது ஹஸன் அகுண்ட் புதன்கிழமை காபூலில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.





ஏனைய இராணுவ குழுக்களுடன் வன்முறையில் ஈடுப்பட்டுக்கொண்டுள்ள அதே வேளை பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இந்த ஊடக மகாநாடு நடத்தப்பட்டுள்ளது.





" குறுகிய கால உதவிகளால் பயனில்லை. நாங்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம்.





பொருளாதார பிரச்னையும் பனிக்குளிரும் மக்களை மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ளது. முஸ்லிம் நாடுகளை எங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்குமாறு கோருகிறோம். அதன் பின்னர் நாம் விரைவாக நாட்டை அபிவிருத்தி செய்வோம்.





சர்வதேச உதவிகள் இப்போது நாட்டினுள் நுழைந்து கொண்டிருக்கின்றன; சர்வதேசம் தலிபான்களின் செயற்பாடுகளை அவதானித்து வருகிறது." - என்றார்.