'வாக்களிப்பு இயந்திரங்களை கையகப்படுத்துமாறு ட்ரம்ப் கட்டளை' - அம்பலமானது அதிர்ச்சி தகவல்

banner

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும் வாக்களிப்பு இயந்திரங்களை கையகப்படுத்துமாறு உயர் இராணுவ தளபதி ஒருவருக்கு உத்தரவிட்ட விடயம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான செய்தியை AFP வெளியிட்டுள்ளது.





இந்த ஆவணம் அமெரிக்க தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து சில அரசியல்வாதிகளால் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆவணத்தில் கையொப்பமிடப்படவில்லை.





2020ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி இந்த ஊழகல்களைப்பற்றி விசாரிப்பதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு இந்த ஆவணங்களை வெளியிட வேண்டாமென ட்ரம்ப் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்த பின்னர் அந்த குழு 750 ஆவணங்களை வெளியிட்டுள்ளது.





உடனடியாக வாக்களிப்பு இயந்திரங்களிலுள்ள சகல தகவல்களையும், இலத்திரனியல் வடிவில் உள்ளதையும் கையகப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்புச்செயலருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாக அந்த மூன்று பக்க ஆவணம் கூறுகிறது.





வாக்களிப்பு இயந்திரங்களில் ட்ரம்பின் செல்வாக்கு செலுத்தப்பட்ட விடயம் அமெரிக்க காங்கிரஸ் புலனாய்வாளர்கள் மற்றும் வலதுசாரி சட்டத்தரணி சிட்னி பௌல் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.