ஆப்கானிஸ்தானில் இருந்து கூண்டோடு வெளியேறும் ஓர் இனம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.





தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது முன்னுரிமை அடிப்படையில் இந்தியா விசா வழங்கியது. 1970 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் சீக்கியர்கள் வசித்து வந்தனர்.





தற்போது 146 சீக்கியர்கள் மட்டுமே வைத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எமது தாய்நாடு நாங்கள் ஆப்கானிஸ்தானை நேசிக்கிறோம் என ஆப்கானிஸ்தானில் தற்போதும் வசித்து வரும் சீக்கியர்கள் கூறுகின்றனர்.





ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கிய சமூகம் நீண்டகாலமாக ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு IS பயங்கரவாதிகள் பல சீக்கியர்களை கொன்றனர்; தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் வேலையின்மை வறுமை என்பவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் எஞ்சியுள்ள குடும்பங்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளன.