இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் பதவியில் இருந்து விடைபெறவுள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, இவருக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன. பதவி நீக்கம் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்திவந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார்.
Related Posts