ரணிலால் நாட்டை மீட்க முடியும் - டக்ளஸ் நம்பிக்கை

Politics 1 வருடம் முன்

banner

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமான நடவடிக்கையாகும்."





இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரொலிக்குத் தெரிவித்தார்.





இலங்கையின் புதிய பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், குறித்த நியமனம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.





" ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளமை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வரவேற்றுள்ளன. ரணிலின் பங்களிப்புடன் அமையும் அரசுக்கு அந்நாடுகள் உதவியளிக்கும். இதன்மூலம் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வழி பிறக்கும் என நம்புகின்றேன்." - என்றும் டள்லஸ் குறிப்பிட்டார்.