முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
Politics 1 வருடம் முன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இதன்படி இன்று உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.
" இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி' என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவனிகள் நேற்று மாங்குளத்தில் ஒன் றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தைவந்தடைந்தது.
கடந்த 2006 ஆம்ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக் கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்துள்ளது.
இந்த நடைபவனி இன்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி, காலை 10.30க்கு முள்ளி வாய்க்காலில் இடம்பெறவுள்ள நினை வேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடியதாக அங்கு சென்றடையும்.
இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தருகின்றவர்கள் காலை 8 மணிக்குபுதுக்குடியிருப்பு சந்தியிலே வருகைதந்து அந்தப் பேரணியில் இணைந்து கொள்ளுமாறும் ஏற்பாடாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரானலியோ அடிகளார் இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடு களும் நிறைவடைந்து உள்ளன எனவும், அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்
Related Posts