'கடனை திருப்பி செலுத்த முடியவில்லை' - வெட்கப்படும் ரணில்

Politics 1 வருடம் முன்

banner

விவசாயத்துக்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.





"ஸ்கை நியூஸ்' செய்திச் சேவைக்கு வழங் கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல்சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது எனவும் அவர் கவலை தெரிவித்தள்ளார். எனவே ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.





மேலும், இந்த நேரத்தில் உலக ளாவிய உணவு நெருக்கடியும் ஏற் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் - இலங்கையில்முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்க
வில்லை'' - என்று அவர் கூறினார்.





""எங்களிடம் டொலரும் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போதுநிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையைத் தாங்க முடியாது'' - எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





இலங்கையின் கடனை திருப்பி செலுத்த முடியாததை முன்னிட்டுத் தாம் வெட்கப்படுகிறார் எனப் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.





இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.