வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேர் கைது!

banner

இலங்கையிலிருந்து, சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





திருகோணமலை சல்லி, சாம்பல் தீவில் நேற்றிரவு (23) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





02 ஆட்டோக்கள், கெப் வாகனமொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.





மேற்படி வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்கு படகில் தயாராகவிருந்தவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.





ஆட்கடத்தலில் ஈடுபடும் ஐந்து பேரும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.





வௌிநாட்டுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும் 07 பெண்களும் சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.





யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.





கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிலாவௌி மற்றும் உப்புவௌி பொலிஸாரிடம், விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.