எரிபொருள் விலை உயர்வையடுத்து, பஸ் கட்டணத்தையும் இன்று நள்ளிரவு முதல் 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி இ.போ.ச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்.
அத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம், 27 ரூபாவிலிருந்து 32 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.