அதிஉயர் சபைக்கு வந்தார் தம்மிக்க பெரேரா!

Politics 1 வருடம் முன்

banner

பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.





நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியபோதே, அவர் இவ்வாறு உறுதியேற்றார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ச அண்மையில் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். அந்த இடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.





தம்மிக்க பெரேராவின் நியமனத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை நேற்று நிராகரிக்கப்பட்டன.





இந்நிலையிலேயே இன்று அவர் எம்.பியாக பதவியேற்றார்.