யாழில் பதுக்கப்பட்டிருந்த 1,150 லீற்றர் பெற்றோல் மீட்பு!
Politics 11 மாதங்கள் முன்

யாழ். சண்டிலிப்பாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 150 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.
மானிப்பாய் சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்பட்டாலும் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படமையினால் பொதுமக்கள் தங்களுடைய ஆட்டோக்களை 82 வழித்தட பகுதியில் நிறுத்தி குறித்த பகுதியிலேயே தங்களுடைய இரவு நேர நித்திரையினையும் கழித்து உணவுகளையும் உட்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகியும் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் குழப்பமடைந்த மக்கள், இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் தலைமையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை 1, 150லீற்றர் பெற்றோல் இருப்பது தெரியவந்தது.
அத்தியாவசிய இருப்பான 300 லீற்றரை கையிருப்பில் வைத்துக் கொண்டு ஏனைய 850 லீற்றரை வினயோகம் செய்வதற்கு பணிக்கப்பட்டது.
அதன் பிறகு ஆட்டோ கார்களுக்கும் ஆயிரம் ரூபாய் விகிதமும் , மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாய் வீதமும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
Related Posts