துப்பாக்கிச்சூட்டில் அறுவர் பலி - 30 பேர் காயம்! சுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் பயங்கரம்!!
Politics 1 வருடம் முன்
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை 10 மணிக்கு தொடங்கியது.
அப்போது, சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கொலையாளியான 22 வயதான இளைஞன் ஒரு மணி நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Posts