'பங்கருக்குள் ஜனாதிபதி' - பதிலடி கொடுக்க இன்று சபைக்கு வந்தார்

Politics 1 வருடம் முன்

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றம் வருகை தந்தார்.





நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.





சபை நடவடிக்கை ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி அவைக்கு வந்தார்.





ஆளுங்கட்சியின் முன்வரிசையில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் அமர்ந்து, சபை நடவடிக்கையை அவதானித்தார்.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளார், பங்கருக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆள முடியாது என எதிரணிகள் நேற்று குற்றஞ்சாட்டின. இந்நிலையிலேயே இன்று அவர் சபைக்கு வந்திருந்தார்.