கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

banner

கரும்புலி தினத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலானது வெறும் புருடாவாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இப்போராட்டத்தை திசை திருப்பவே கரும்புலி கதை புரளி கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.





இதனை பயன்படுத்தி இராணுவத்தை களமிறக்கலாம். போராட்டம் திசை திருப்பலாம். எனவே, புலிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்." - எனவும் செல்வம் குறிப்பிட்டார்.