'தலைவராக சித்தார்த்தன் தெரிவு'

banner

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 10 ஆவது பொதுச்சபைக் கூட்டம், யாழ். இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் இன்று இடம்பெற்றது.





இதன்போது கட்சியின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டார்.





கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும்
பொருளாளராக க.சிவநேசனும் ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும் சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகினர்.





மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்ததுடன் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.





ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 10 ஆவது தேசிய மாநாடு நாளைய தினம்(07) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.





கட்சியின் தேசிய மாநாட்டில் சகோதர கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.