புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!
Politics 1 வருடம் முன்
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடைநீக்கம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என்று விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரான மொஹமட் முஸம்மில் இவ்வாறு வலியுறுத்தினார்.
" தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதாலேயே அடையாளம் காணப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு இலங்கை தடை விதித்தது.
இந்நிலையில் சில அமைப்புகள் மற்றும் நபர்கள்மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் பின்புலம் என்னவென்று தெரியவில்லை. எனவே, பாதுகாப்பு அமைச்சு உரிய விளக்கத்தை விரைவில் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Related Posts