காசா போரில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஆஸ்திரேலியா உள்ளது என்று பிரதமர் Anthony Albanese நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள புதிய போர் நிறுத்த யோசனையை முழுமையாக வரவேற்றுள்ள அவர், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் எனவும் கூறினார்.
அத்துடன், இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வு முன்மொழிவு ஏற்புடையதாக இருக்கும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இஸ்ரேல், ஹமாஸ் மோதல் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதை சில கிறீன்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் எனவும் Anthony Albanese கேட்டுக்கொண்டுள்ளார்.