மெல்பேர்ணில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 24 பேர் விக்டோரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 24 பேரில் எட்டு பேர் இதற்கு முன்னரும் குற்றங்களுக்காக கைதாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
97 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான களவாடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஜுலை மாதம் முதல் பொலிஸாரால் இதற்குரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளது.