செம்மறி ஆடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியொன்று தீப்பிடித்து சுமார் 200 செம்மறி ஆடுகள் உடல் கருகி உயிரிழந்துள்ளன.
சிட்னிக்கு வடமேற்கே 610 கிமீ தொலைவில் உள்ள மிட்செல் எனும் நெடுஞ்சாலையிலேயே குறித்த வாகனம் இன்று அதிகாலை தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து நியூ சவூத் வேல்ஸ் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். எனினும், தீ வேகமாக பரவியதால் லொறிக்குள் இருந்த 200 ஆடுகளும் பலியாகின.
32 வயதான சாரதி காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார்.
தீ பரவல் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.