மெல்பேர்ணில் யுவதியொருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த 21 வயது இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரை அணுகி தாக்குதலை நடத்திய சுமார் 10 பேரடங்கிய குழுவில் இந்த பெண் இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இன்னும் எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.