டாஸ்மேனியாவிலுள்ள ஆஷ்லே சிறார் தடுப்பு மையத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும், அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 11 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.